ஆப்நகரம்

சுற்றுலா வழிகாட்டியாகவே மாறிய பிரதமர் மோடி!!

மாமல்லபுரத்துக்கு இன்று மாலை வருகை தந்த சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு, அங்குள்ள பல்வேறு சிற்பங்களின் சிறப்புகளை ஓர் சுற்றுலா வழிக்காட்டியை போல, பிரதமர் மோடி விளக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 11 Oct 2019, 6:05 pm
சீன அதிபர் ஷி ஜிங்பிங், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியுடனான அவரது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை, மாமல்லபுரத்தில் இன்றிரவு நடைபெற உள்ளது.
Samayam Tamil pmi


இதற்காக, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியிலிருந்து மாலை 4:15 அளவில் புறப்பட்ட சீன அதிபர் ஷி ஜிங்பிங், 5 மணியளவில் மாமல்லபுரம் சென்றடைந்தார்.

சீன அதிபருக்கு தயாராகிறது தமிழ் பாரம்பரிய உணவுகளான தக்காளி ரசம், சாம்பார்!!

அங்கு வேட்டை, சட்டை, தோளில் துண்டு என தமிழர்களின் பாரம்பரிய உடையில் அசத்தலாக காட்சியளித்த பிரதமர் மோடி, சீன அதிபரை உற்சாகமாக வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும், மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற பல்லவர்களின் கலை சிற்பங்களை சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப் பார்த்தனர்.
அப்போது, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களின் சிறப்புகள் குறித்து, பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விரிவாக விளக்கினார்.

இரு தலைவர்களின் கூடவே இரண்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் இருந்தபோதிலும், மாமல்லபுர சிற்பங்களின் சிறப்புகள் குறித்து, ஓர் சுற்றுலா வழிகாட்டிக்கான ஆர்வத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபருக்கு விளக்கியது இருநாட்டு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி