பிரதமர் நரேந்திர மோடி எப்போது வேண்டுமானாலும் சென்னை வரலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. முதல்வருக்கு மாரடைப்பு என்ற செய்தி வெளியாகி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகரிடம் தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு மத்திய பாதுகாப்புப் படையை தமிழக அரசு கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது தமிழகத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை அனுப்பப்படவில்லை என்ற செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி எந்த நேரத்திலும் சென்னை வருவார் என்று தகவல் வெளியாகி மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து, அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் திண்டாடி வருகின்றனர். டிவிக்கள் மூலம் இந்த செய்தி மற்ற மாவட்டங்களுக்கும் பரவி மற்ற மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகரிடம் தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு மத்திய பாதுகாப்புப் படையை தமிழக அரசு கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது தமிழகத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை அனுப்பப்படவில்லை என்ற செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி எந்த நேரத்திலும் சென்னை வருவார் என்று தகவல் வெளியாகி மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து, அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் திண்டாடி வருகின்றனர். டிவிக்கள் மூலம் இந்த செய்தி மற்ற மாவட்டங்களுக்கும் பரவி மற்ற மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.