ஆப்நகரம்

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா; பின்வாங்கினாரா பிரதமர் மோடி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 12:17 pm
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விடுதலை ஆகும் அதே நாளில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறை செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை சசிகலா சபதம் செய்ததை யாராலும் மறக்க முடியாது.
Samayam Tamil PM Modi and TN CM Palaniswami


எனவே சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு நேராக ஜெயலலிதா சமாதிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் அதிமுக அரசு திட்டமிட்டு தான் காய்களை நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

சசிகலா சிகிச்சையில் மர்மம்; வெடிக்கும் புதிய சர்ச்சை!
இதில் சசிகலா விடுதலை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்றார். அதிமுக - அமமுக இணைப்பை திரை மறைவில் இருந்து பாஜக தான் நடத்திக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர் தான் பழனிசாமி. அப்படியிருக்கையில் முதல்வரின் பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் டெல்லி பயணத்தின் போது ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பிரதமரின் வருகை தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 21) திரைப்படங்கள்!
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமர் வருவதற்கு வாய்ப்பில்லை என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக விரைவில் பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி