இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மலையக தமிழர்களிடையே பேசும்போது, எம்ஜிஆரின் பெயரை நினைவுகூர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இதன் ஒருபகுதியாக, அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, நுவரெலியா உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இந்திய பூர்விக தமிழர்களுக்கான மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார்.
இதன்பின்னர், அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ‘’தேயிலைக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு உண்டு. நான் டீக்கடையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவன். இதேபோன்று, தமிழகத்தில் நடிகராகவும், முதல்வராகவும் மக்கள் மனதை ஈர்த்த எம்ஜிஆர், கண்டியில்தான் பிறந்தார். உங்களின் முன்னேற்றம், எங்களுக்குப் பெருமையான ஒன்றாகும். இதற்காக, இந்தியா தொடர்ந்து பாடுபடும்,’’ எனக் குறிப்பிட்டார்.
எங்கு சென்றாலும், அப்பகுதி மக்களை ஈர்க்கும் விசயங்களை குறிப்பிட்டுப் பேசும் மோடி, எம்ஜிஆர் பெயரை குறிப்பிட்டு, இலங்கையில் உள்ள இந்திய பூர்விக தமிழர்களை ஈர்க்க முயன்றுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
PM Modi remembered MGR legacy in his speech to the Sri lankan Tamils in Kandi.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இதன் ஒருபகுதியாக, அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, நுவரெலியா உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இந்திய பூர்விக தமிழர்களுக்கான மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார்.
இதன்பின்னர், அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ‘’தேயிலைக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு உண்டு. நான் டீக்கடையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவன். இதேபோன்று, தமிழகத்தில் நடிகராகவும், முதல்வராகவும் மக்கள் மனதை ஈர்த்த எம்ஜிஆர், கண்டியில்தான் பிறந்தார். உங்களின் முன்னேற்றம், எங்களுக்குப் பெருமையான ஒன்றாகும். இதற்காக, இந்தியா தொடர்ந்து பாடுபடும்,’’ எனக் குறிப்பிட்டார்.
எங்கு சென்றாலும், அப்பகுதி மக்களை ஈர்க்கும் விசயங்களை குறிப்பிட்டுப் பேசும் மோடி, எம்ஜிஆர் பெயரை குறிப்பிட்டு, இலங்கையில் உள்ள இந்திய பூர்விக தமிழர்களை ஈர்க்க முயன்றுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
PM Modi remembered MGR legacy in his speech to the Sri lankan Tamils in Kandi.