கொரோனா நிலவரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 10ம் தேதி முதல், வரும் 24ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு, முழு ஊரடங்ககு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக கொரோனா நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் மருத்துவ உதவிகள் வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதே போல, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நிலவரம் தொடர்பாக, விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் மருத்துவ உதவிகள் வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதே போல, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நிலவரம் தொடர்பாக, விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.