ஆப்நகரம்

ஸ்டாலின் போட்ட சைலண்ட் உத்தரவு: பாஜக பக்கம் நகரும் திமுக?

பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மோடியின் வருகை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 25 May 2022, 11:57 am
பிரதமர் மோடி நாளை (மே 26) மாலை சென்னை வந்து முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். மோடியின் வருகையை பாஜகவினர் எதிர்பார்ப்பதை போல முதல்வர் தரப்பும் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வருகின்றன.
Samayam Tamil pm modi to visit tamil nadu cm mk stalin issues silent order to intelligence sources said
ஸ்டாலின் போட்ட சைலண்ட் உத்தரவு: பாஜக பக்கம் நகரும் திமுக?


பயண திட்டம் இதுதான்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்று சொன்னாலும், அவர் சில மணி நேரங்கள் சென்னையில் இருந்துவிட்டு கிளம்பிச் செல்கிறார். நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார் மோடி. பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார்.

திறந்து வைக்கும் திட்டங்கள்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். விழா முடிந்ததும் மீண்டும் காரில் கிளம்பி ஐஎன்எஸ் அடையாறு சென்று, ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்து, இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

அப்போ கருப்புக் கொடி, இப்போ வெள்ளைக் கொடி?

அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது பிரதமர் வருகையை எதிர்பார்த்துள்ளதாகவும், பயணத்தில் எந்த அசௌகரியமும் பிரதமருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறதாம். கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துவிடக்கூடாது, விழா அரங்கில் கருப்பு சட்டைகள் அணிந்து யாரும் எதிர்ப்பு தெரிவித்துவிடக்கூடாது எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனமாக இருங்கள் என உளவுத்துறைக்கு கோட்டையிலிருந்து முக்கிய உத்தரவுகள் சென்றுள்ளதாம்.

பாஜக பக்கம் நகரும் திமுக - காரணம் இதுதான்!

இது பழைய பாஜக அல்ல, தொட்டு பாருங்கள்: அமைச்சருக்கு அண்ணாமலை சவால்!

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான அரசியலை ஸ்டாலினும் திமுக அரசும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இருந்த போதும் ஒன்றிய அரசின் ஆதரவு இல்லாமல் பல விஷயங்களை நடத்திக்காட்ட முடியாது என்ற யதார்த்தத்தையும் புரிந்துவைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வந்தாக வேண்டும். நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாத்தியப்படுத்த முடியாது என நினைக்கிறார்களாம். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்று கூறுகிறார்கள். அதனாலே மோடி வருகைக்கும், வெங்கையா நாயுடு வருகைக்கும் சிறப்பு கவனம் கொடுத்துள்ளதாம் முதல்வர் தரப்பு.

அடுத்த செய்தி