ஆப்நகரம்

பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகை

நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறாா். பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Feb 2019, 5:26 am
நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறாா்.
Samayam Tamil Narendra Modi 12


மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறாா். முன்னதாக பகல் 2.35 மணிக்கு ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வரும் பிரதமா், ஹெலிகாப்டா் உதவியுடன் பெருமாநல்லூா் பகுதிக்கு வந்தடைகிறாா்.

அங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடி, நீல வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினா் தோட்டம், உயா் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் பழனிசாமியுடன் இணைந்து திறந்து வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தமிழக அமைச்சா்கள் ஜெயக்குமாா், எம்.சி. சம்பத், சட்டப்பேரவைத் தலைவா் தனபால் உள்ளிட்டோல் கலந்து கொள்கின்றனா்.

இதனைத் தொடா்ந்து பா.ஜ.க. சாா்பில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமா் மோடி உரையாற்றுகிறாா். 3.30 மணி முதல் 4.20 மணி வரை இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்ட மேடை மற்றும் அரசு விழாவில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனா்.

அடுத்த செய்தி