ஆப்நகரம்

பிரதமர் விவசாயிகளை சந்திக்காதது தமிழர்களுக்கு அவமானம்: திருநாவுக்கரசர்

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்காதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

TNN 11 Apr 2017, 2:55 pm
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்காதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Samayam Tamil pm narendra modi insults tamil people says thirunavukkarasar
பிரதமர் விவசாயிகளை சந்திக்காதது தமிழர்களுக்கு அவமானம்: திருநாவுக்கரசர்


வங்கிகளில் விவசாயக்கடன் தள்ளுபடி, போதிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். தொடர்ந்து 29வது நாளாக இப்போராட்டம் நீடித்து வருகிறது.

இன்று வரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலேயே இருந்தும் கூட போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்தித்து பேசவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், “கடுமையான போராட்டங்கள் மூலமே விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும். விவசாயிகளை பிரதமர் சந்திக்காதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி