ஆப்நகரம்

Chennai Metro: வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 10 Feb 2019, 4:16 pm
சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil சென்னை மெட்ரோ புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி தென்னிந்திய மாநிலங்களுக்கு வந்துள்ளார். அதை முன்னிட்டு பகல் 2.35 மணிக்கு ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் பிரதமர் மோடி.

அவரை, முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட தமிழக உயரதிகாரிகள் மற்றும் பாஜக தமிழக தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிறகு கோயம்புத்தூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருப்பூர் சென்றார். அங்கு, சென்னையில் அமையவிருக்கும் 100 படுக்கை வசதிகளை கொண்ட இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்தின் மூலம் 1.22 லட்சம் எளிய மக்கள் பயன் பெறுவார்கள்.

மேலும், திருச்சி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட உள்ள கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டினார். எண்ணூர் பிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் பாதையையும் பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

அதை தொடர்ந்து திருப்பூரில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் மெட்ரோ இயக்கத்திற்காக பச்சைக் கொடி அசைத்தனர்.

அடுத்த செய்தி