ஆப்நகரம்

ஏழைகளை பாதிக்கும் ஜிஎஸ்டி: அன்புமணி எதிர்ப்பு!

ஜிஎஸ்டி வரி விதிப்பை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்த்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2022, 6:51 am
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil ANBUMANI RAMADOSS


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded)உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது.

தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்துவிட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணியில் என்ன நடக்கிறது? அடுத்த மூவ் என்ன?
இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு: இரட்டை இலை யாருக்கு? டெல்லியின் திட்டம் என்ன?

மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி