ஆப்நகரம்

குடியரசுத்தலைவர் தேர்தல் பா.ம.க. புறக்கணிப்பு : ராமதாஸ் அறிவிப்பு

குடியரசுத்தலைவர் தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

TNN 16 Jul 2017, 2:30 pm
சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil pmk boycott presidential election
குடியரசுத்தலைவர் தேர்தல் பா.ம.க. புறக்கணிப்பு : ராமதாஸ் அறிவிப்பு


தற்போதைய குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜியின் பதவி காலம் வருகிற 24ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14 வது குடியரசு தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நாளை நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சாா்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகின்றாா்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் சாா்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா் போட்டியிடுகின்றாா்.

தமிழகத்தில் அதிமுக ராம்நாத் கோவிந்திற்கும் , திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மீரா குமாருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஓரே ஒரு எம்.பியை வைத்துள்ள பா.ம.க தனது நிலைப்பாடை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பாமக தலைமையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது," காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு ஏதிர்ப்பு தெரிவித்து பாமக குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணித்துள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி