ஆவடியில் கோழி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், பாமக மற்றும் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை அடுத்துள்ள அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் கெளரிவேல்(29). இவர் ஆவடி வடக்கு பகுதியில் பாமக நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருடைய தம்பி பிரபுவேல், ஆவடி 37வது வட்டத்தில் திமுக இளைஞரணி செயலளராக உள்ளார்.
இருவரும் அவர்களது நண்பர் ஒருவரது இரங்கல் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, இரங்கலுக்காக கோழி தேவைப்பட்டது. இதற்காக ஆவடி மார்க்கெட்டில் உள்ள கோழி கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கோழி விலையில் பேரம் பேசும் போது, இவர்களுக்கும் கடைஉரிமையாளர் ஜெயாலிணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த ஜெயாலிணி, கறி வெட்டும் அரிவாளால் இருவரையும் சாராமாரியாக வெட்டினார்.
இதில் உயிருக்கு பயந்து பிரபவேலும், கெளரிவேலும் ஓட, இருவரையும் ஜெயாலிணி விடாமல் துரத்திச் சென்று தாக்கினார். பின்னர் இருவரும் உயிருக்கு பயந்து, ஆவடி நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர். ரத்த வெள்ளத்தோடு அலுவலகத்தில் புகுந்த இருவரையும் பார்த்து, அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பிரபுவேல், கெளரிவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடை உரிமையாளர் ஜெயாலிணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடியை அடுத்துள்ள அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் கெளரிவேல்(29). இவர் ஆவடி வடக்கு பகுதியில் பாமக நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருடைய தம்பி பிரபுவேல், ஆவடி 37வது வட்டத்தில் திமுக இளைஞரணி செயலளராக உள்ளார்.
இருவரும் அவர்களது நண்பர் ஒருவரது இரங்கல் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, இரங்கலுக்காக கோழி தேவைப்பட்டது. இதற்காக ஆவடி மார்க்கெட்டில் உள்ள கோழி கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கோழி விலையில் பேரம் பேசும் போது, இவர்களுக்கும் கடைஉரிமையாளர் ஜெயாலிணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த ஜெயாலிணி, கறி வெட்டும் அரிவாளால் இருவரையும் சாராமாரியாக வெட்டினார்.
இதில் உயிருக்கு பயந்து பிரபவேலும், கெளரிவேலும் ஓட, இருவரையும் ஜெயாலிணி விடாமல் துரத்திச் சென்று தாக்கினார். பின்னர் இருவரும் உயிருக்கு பயந்து, ஆவடி நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர். ரத்த வெள்ளத்தோடு அலுவலகத்தில் புகுந்த இருவரையும் பார்த்து, அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பிரபுவேல், கெளரிவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடை உரிமையாளர் ஜெயாலிணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.