ஆப்நகரம்

கடலூர் ஆபாச பட விவகாரம்; வெறியேற்றும் பேச்சால் இப்படியொரு கொடூரம் - ராமதாஸ் கடும் கண்டனம்!

ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவத்தில், இருவர் உயிரிழந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jun 2019, 3:40 pm
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil RAMADOSS


அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டதால் அவமானமடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தக் கொடூரச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

கடலூர் மாவட்டத்தில் நாடக காதல் கும்பலின் அக்கிரமங்கள் அண்மைக்காலமாக அத்துமீறத் தொடங்கி உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் முன்பும், அவற்றுக்கு செல்லும் சாலைகளிலும் நாடகக் காதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூடி நின்று மாணவிகளையும், இதர பெண்களையும் பாலியல் ரீதியாக சீண்டுவது வாடிக்கையாகி விட்டது.

பிறசாதி பெண்களை தேடித்தேடி காதலிக்க வேண்டும், ஒவ்வொரு தலித் மீதும் குறைந்தது 10 வழக்குகள் இருக்க வேண்டும்; அவற்றில் ஒரு வழக்கு கொலை வழக்காக இருக்க வேண்டும், எங்கள் இளைஞர்களிடம் தான் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது என்பது போன்ற நாடக கும்பல் தலைவர்களின் வெறியேற்றும் பேச்சு தான் இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கடலூர் மாவட்ட காவல்துறை, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதை கைவிட வேண்டும். விக்னேஷை படுகொலை செய்ததுடன், ராதிகாவின் தற்கொலைக்கும் காரணமாக இருந்த நாடக காதல் கும்பலை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கடலூர் மாவட்ட காவல்துறை அதன் நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி