ஆப்நகரம்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்: ஆளுநரை கை காட்டும் அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Oct 2022, 3:12 pm
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பலரது குடும்பம் கடன் பிரச்சினையால் தள்ளாடிவருகிறது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நிரந்தர தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
Samayam Tamil anbumani ramadoss


இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொள்ளப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பாமகவின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுநரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்.
ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு மேட்ச்சாகும் வடிவேலு டயலாக்: அதிமுக தொண்டர்கள் ரியாக்‌ஷன் என்ன?
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி