ஆப்நகரம்

எழுவர் விடுதலை: பிரதமரிடம் வலியுறுத்திய பாமக

பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

Samayam Tamil 10 Oct 2019, 3:14 pm
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜிஜீன் ஆகியோர் நாளை முறைசாரா மாநாட்டுக்காக தமிழ்நாடு வருகைதருகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பாமக நிறுவனர் இராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை காலை 11.30 மணிக்கு சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு நீடித்தது.
Samayam Tamil Untitled collage (5)


வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு: திமுக, பாமக அறிக்கை போர்!

இந்த சந்திப்பின் போது இரு முக்கிய மனுக்களை ராமதாஸ் பிரதமரிடம் வழங்கினார். 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

மற்றொரு மனுவில் கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்- ராமதாஸ் கொந்தளிப்பு!

கர்நாடகா அரசு காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த அணை கட்டும் திட்டத்திற்கும் மத்திய அரசு, தமிழ்நாடு அரசை கேட்காமல் அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி