ஆப்நகரம்

காதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை: கிருஷ்ணகிரி காதல் திருமணம் படுகொலையில் முடிந்ததற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TIMESOFINDIA.COM 17 Nov 2018, 10:51 pm
நந்திஷ்(26) ஒரு தலித். இவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுவாதி(19) என்ற பெண்ணை காதலித்து மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
Samayam Tamil Ramadoss


இந்த தம்பதி கிருஷ்ணகிரி மாவட்டம் சுடகவுண்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் மாயமாகினர். அவர்கள் கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு கருதி தஞ்சமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் கர்நாடக மாநிலம் சிவானசமுத்திராவில் காவிரி ஆற்றில் இருவரும் பிணமாக மீட்டெடுக்கப்பட்டனர். இது பெங்களூருவில் இருந்து 135 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதுதொடர்பான விசாரணையில் இளம்பெண்ணின் தந்தை, இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. அவர்களின் கைகள் கட்டப்பட்டு, ஆற்றில் வீசி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

நந்திஷ் உடல் 5 நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் உடல் இருநாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இளம் தம்பதி கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுபோன்ற கொடூரங்களை கடுமையாக கண்டிக்கிறேன். அரசு தலையிட்டு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி