ஆப்நகரம்

வன்னியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஏ.கே. நடராசன் மறைவுக்கு இரங்கல்!!

சமூக நற்பணி மன்றத்தின் தலைவரும், வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.நடராசன் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Nov 2019, 9:43 am
ஏ.கே.நடராசன் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil வன்னியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஏகே நடராசன்
வன்னியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஏகே நடராசன்


மேலும் அவரது அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:

லார்சன் - டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு உயர்பதவியில் இருந்த ஏ.கே. நடராசன் சமுதாய நலனுக்காக பாடுபட்டவர். வன்னிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; முன்னேற வேண்டும் என்று விரும்பியவர். 1980-ஆம் ஆண்டில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரே குடையில் கொண்டு வரும் பணியில் எனக்கு துணை நின்றவர்.

வன்னியர் சங்கத்தின் கிளைகளை தொடங்குவதற்காக உழைத்தவர். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி தொடக்க காலத்தில் நடத்தப்பட்ட ஒரு நாள் சாலை மறியல் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர். ஏராளமான நூல்களை எழுதியவர். எனது மதிப்பிற்குரியவர்களில் ஒருவர்.

அவருடன் இணைந்து ஆர்.கோபால் தலைமையில் நூற்றுக்கணக்கான சிக்கனத் திருமணங்களை நடத்தி வைத்த நினைவு இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஏ.கே.நடராசனுடன் பழகிய, ஒன்றாக இணைந்து பணி செய்த நாட்களை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது.

ஏ.கே.நடராசன் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி