ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இலவச பூஸ்டர் டோஸ்: அன்புமணி வைத்த கோரிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 27 Apr 2022, 2:02 pm
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மே 8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
Samayam Tamil booster dose


இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், "ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை டெல்லி அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
பாஜக சித்தாந்தம் இதுதான்: புது விளக்கம் கொடுத்த அண்ணாமலை
தமிழகத்திலும் கொரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக ஏற்கப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஐந்து நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி