ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கொடூர விஷமுள்ள பாம்பு

ஹார்ன் பிட் வைப்பர் என்ற வட ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு சென்னை விமான நிலையித்தில் கைப்பற்றப்பட்டது. இது சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 11:54 pm
ஹார்ன் பிட் வைப்பர் என்ற வட ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு சென்னை விமான நிலையித்தில் கைப்பற்றப்பட்டது. இது சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. இந்த பாம்பின் விஷத்துக்கு விஷமுறிவு மருந்து இந்தியாவில் கிடையாது. இது யாரையாவது கொத்தினால் மரணம் நிச்சயம். இதனை விமானம் மூலம் கடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil viper

இந்த நபர் பாங்காக்கில் இருந்து இந்த பாம்பை கடத்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாம்பு தவிர ரிச்சோரஸ் இகுவானா, மூன்று ராக் இக்குனா, 22 எகிப்திய ஆமைக்குஞ்சுகள், 4 நீல நாக்கு ஸ்கிங்குகள், 4 ஜீனஸ் ஹைலா தவளைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றுள் எகிப்திய ஆமைகுஞ்சுகள் அழிந்துவரும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி