ஆப்நகரம்

போயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா? வெளிவராத தகவல்கள்!

சசிகலா விடுதலை, மற்றும் சென்னை வந்த பின் அவர் வசிக்கும் வீடு குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Samayam Tamil 15 Jan 2021, 9:54 am
தமிழக அரசியல் களத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டன் பேசு பொருளாகிவருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இடம் என்பதே அதன் முக்கியத்துவத்துக்கான காரணம்.
Samayam Tamil poes garden house getting ready for sasikala release sources said
போயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா? வெளிவராத தகவல்கள்!


தமிழக அரசியலில் போயஸ் கார்டன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெ வீட்டில் சசிகலா இருந்துவந்தார். வீட்டைப் போலவே கட்சியையும், ஆட்சியையும் அவர் வழிநடத்த முடிவு செய்தார். ஆனால் அதற்குள்ளாக வந்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சசிகலா சிறை சென்ற இந்த நான்கு ஆண்டுகளில் ஜெ வசித்த பங்களா அரசுடைமை ஆனது. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்து வழிநடத்த ஆட்சி எடப்பாடி வசம் சென்றுள்ளது.

சொத்துக்கள் முடக்கம்!

சசிகலா விடுதலையாகி வெளியே வந்தபின் எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் போயஸ் கார்டனிலேயே ஒரு பங்களா அவருக்கு தயாராகி வந்தது. ஆனால் அண்மையில் வருமான வரித்துறை சசிகலாவின் சொத்துக்களை முடக்கியது. அதில் போயஸ் கார்டனில் உருவாகி வந்த பங்களாவும் ஒன்று.

மீண்டும் தொடங்கிய கட்டுமானப் பணி!

சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்: குருமூர்த்தி சொல்லும் காரணம் இதுதான்!

இதனால் அதன் கட்டுமானப் பணிகள் தடை பட்டன. முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்கமுடியாது, வாங்க முடியாது. ஆனால் சட்ட ரீதியாக முடக்கத்தை நீக்கும் வரையில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம் என வழக்கறிஞர்கள் கூறிய நிலையில் டிடிவி தினகரன் கட்டுமான பணிகளை முடுக்கிவிட்டார்.

25ஆம் தேதி கிரகப்பிரவேசம்?

தற்போது தயாராகியுள்ள இந்த பங்களாவுக்கு 25ஆம் தேதி பால் காய்ச்சும் விழா நடைபெறவுள்ளதாக அமமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். ஜனவரி 27ஆம் தேதி விடுதலை உறுதியாகியுள்ள நிலையில் அவர் வெளியே வருவதற்கு பகல் பொழுதாகிவிடும், ஓசூர் வர இரவாகிவிடும் என சொல்லப்பட்டது.

எந்நேரம் விடுதலை?

முடிவே இல்லாமல் வெளுக்கப் போகும் மழை; தமிழகத்திற்கு அதிர்ச்சி செய்தி!

ஆனால் விடுதலை செய்வதற்கான கோப்புகளை முன்கூட்டியே தயார் செய்துவைக்கவும், காலையில் 9.30 மணிக்கு சிறை அலுவலகம் திறக்கப்பட்டவுடன் அவர் விடுதலையாவார் என பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னைக்கு அன்றிரவே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்ல இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் மீண்டும் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி