ஆப்நகரம்

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.! இனி இந்த குற்றத்திற்கு இவ்வளவு அபராதம்..

சாலை விதிகளை மீறுவோர் மீது அபராதத்தையும், தண்டனையையும் உயர்த்தி மத்திய அரசு புதிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.

Samayam Tamil 1 Sep 2019, 11:32 am
போக்குவரத்து குற்றங்களை தடுக்க 18 மாநிலங்களின் அமைச்சகத்துடைய ஒப்புதலோடு சட்ட திருத்த மசோதா நிறைவேறியதையொட்டி இந்த புதிய சட்ட திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Samayam Tamil 4


இதன்படி, குற்றத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. சிக்னலில் நிற்காமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டியை ஓட்டி செல்வது. குடி போதையில் வாகனத்தை இயக்குவது ஆகியவற்றிற்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி- இனி வாக்காளர்களே பிழைகளை திருத்தலாம்!

லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தில் பயணித்தால் 500 முதல் 5000 வரை அபராதம். சரியான ஆவணம் இல்லையென்றால் 10 ஆயிரம் வரையிலும், அவசர ஊர்திகளுக்கு வழி விடாமல் சென்றால் நிலைமையை பொறுத்து 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படும்.

மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை!

அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் 400 முதல் 2 ஆயிரம் வரையிலும், சீட் பெல்ட் அணியாததற்கு 100 இல் இருந்து 1000 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்படாத இன்சூரன்சுக்கு 2000 ரூபாய், ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் 1000 ரூபாயுடன் மூன்று மாத காலம் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

மாணவ, மாணவியர் பேராசிரியர் வீடுகளுக்கு செல்ல தடை..- சென்னை பல்கலை அதிரடி.!

18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் சம்மந்தப்பட்ட பெற்றோர் அல்லது கார்டியன் எவரேனும் இருந்தால் 25000 ரூபாய் அபராதமும், மூன்று வருட சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என புதிய சட்டம் தெரிவிக்கிறது.

அடுத்த செய்தி