ஆப்நகரம்

விஷவாயு தாக்கி இருவர் பலி; அண்ணா பல்கலை.,-யில் விபரீதம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TNN 22 Jun 2016, 9:22 am
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil poisoning gas attack two dead
விஷவாயு தாக்கி இருவர் பலி; அண்ணா பல்கலை.,-யில் விபரீதம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொட்டிக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் அயப்பக்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரமேஷ் சங்கர், தீபன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாரா விதமாக விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும் நிலைகுலைந்தனர். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்