ஆப்நகரம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது?- வீட்டின் முன் குவிந்த போலீஸ்!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் காவல்துறையினர் குவிந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 11:45 pm
'சர்கார்' பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் குவிந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
Samayam Tamil இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது?- வீட்டின் முன் குவிந்த போலீஸ்!!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது?- வீட்டின் முன் குவிந்த போலீஸ்!!


நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு, பேனர்களை கிழித்து வன்முறை செய்தனர். மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் குவிந்துள்ளதாகவும், அவர் அங்கு இல்லாததால் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை, வழக்கமான ரோந்து பணிக்கே சென்றதாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி