ஆப்நகரம்

வீடியோ : மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்!

வீடியோ : மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்!

TOI Contributor 19 May 2017, 9:23 pm
டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Samayam Tamil police attacked public brutally those who oppose tasmac
வீடியோ : மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்!


தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் ஆம்பூரை அடுத்த அழிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்ற டாஸ்மாக் போராட்டத்தில் வன்முறை உண்டானது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் இந்த கொடூர தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அழிஞ்சிக்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து போராட்டம் நடத்தியும் மக்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. அதன்பின்னர் காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்து உடைக்கவே, கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர்.

அடுத்த செய்தி