ஆப்நகரம்

பிரேமலதா விஜயகாந்த் மீது போலீஸ் வழக்குப் பதிவு

வாக்காளர்கள், ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டும் எனப் பேசியதாகக் கூறி, தேமுதிக மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது திருநெல்வேலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

TOI Contributor 26 Mar 2016, 11:00 pm
வாக்காளர்கள், ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டும் எனப் பேசியதாகக் கூறி, தேமுதிக மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது திருநெல்வேலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil police case filed on premalatha vijaykanth
பிரேமலதா விஜயகாந்த் மீது போலீஸ் வழக்குப் பதிவு


திருநெல்வேலியில், தேமுதிக சார்பாக, நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா எந்த திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில், பொதுமக்களிடம் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஏமாற்றுகின்றனர்.

கரண்ட் கட்டணம், பால்கட்டணம், வீட்டுச்செலவு என ஆண்டுக்கு, ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவாகிறது. எனவே அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ பணம் தந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வாங்குங்கள், என பிரேமலதா பேசினார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியான தாசில்தார் மரகதநாதன், திருநெல்வேலி நகர போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். பின், பிரேமலதா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அடுத்த செய்தி