ஆப்நகரம்

நான் 9 பேரை சுட்டுக் கொன்றேனா? தூத்துக்குடி ஏட்டு ராஜா விளக்கம்!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏட்டு ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 9:16 pm
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏட்டு ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil Police Constable


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டின் போது, போலீஸ் வேனில் ஏறி நின்று, சீருடை அணியாத போலீஸ் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் நபர் போலீஸ் ஏட்டு ராஜா என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏட்டு ராஜாவின் ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில், போராட்டம் தீவிரமடைந்த போது போலீசாருக்கு உணவு விநியோகம் செய்யும் பொறுப்பாளராக இருந்தேன்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவு வந்தது. எனவே வேனில் சென்று ஆட்சியர் அலுவலக பின்புறத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்தேன். அப்போது பொதுமக்கள் திரளாக வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை எச்சரிக்கை செய்யவே, வேனில் ஏறி துப்பாக்கியால் சுட்டேன். உடனே கீழே இறங்கிவிட்டேன். ஆனால் அதற்கு முன்பாகவே மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. நான் யாரையும் சுடவில்லை. என் மீது தவறான குற்றச்சாட்டு பரவி வருகிறது என்று ஏட்டு ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Police constable Raja explains about Tuticorin Sterlite protest shooting.

அடுத்த செய்தி