ஆப்நகரம்

மெரீனாவில் பன்னீருக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம்? ஏராளமான போலீஸ் குவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 17 Feb 2017, 11:47 am
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil police force reached chennai marina duot protest favour for ops
மெரீனாவில் பன்னீருக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம்? ஏராளமான போலீஸ் குவிப்பு


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலையற்ற அரசு காணப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அதிர்ச்சி தகவலால், அதிமுக இரண்டாக உடைந்தது. ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றார். இதையடுத்து ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வானார்.

பின்னர் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலுடன், பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று கூறப்படும் நிலையில், புதிதாக மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அவர்கள் சென்னை மெரினாவில் கூடி, ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மெரினாவில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Police force reached Chennai Marina duot protest favour for OPS.

அடுத்த செய்தி