ஆப்நகரம்

முதல்வரை அவதூறாக பேசியதாக ஆா்.எஸ்.பாரதி மீது வழக்கு

முதல்வா், அமைச்சா்கள் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Sep 2018, 9:46 am
தி.மு.க. கண்டன பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா், அமைச்சா்கள் குறித்து அவதூறாக பேசியதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி உள்பட 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil RS Bharathi


அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சாா்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 26ம் தேதி கோவை மாட்டம் போரூா் பகுதியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினா் காா்த்திகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அமைச்சா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளா் ஜெகநாதன் புகாா் அளித்துள்ளாா்.

இந்த புகாாின் அடிப்படையில் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினா் காா்த்திக், மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் உள்பட 7 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

அடுத்த செய்தி