ஆப்நகரம்

சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக வாலிபருக்கு அபராதம்!!

தஞ்சாவூர் அருகே சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகக் கூறி வாலிபர் ஒருவருக்கு அபராதம் விதித்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 26 Sep 2017, 12:44 pm
தஞ்சாவூர் அருகே சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகக் கூறி வாலிபர் ஒருவருக்கு அபராதம் விதித்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil police have fined the 2 wheeler youth for not wearing the seat belt
சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக வாலிபருக்கு அபராதம்!!


தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள் குறித்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுபவர்கள், பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை கையும் களவுமாகப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இதேபோல் தஞ்சையிலும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காட்டை சேர்ந்த பாண்டியராஜ் என்ற வாலிபருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர். இவரது வயது 29. இவர் சென்றதோ மோட்டார் சைக்கிள். அதற்கு எப்படி சீட் பெல்ட் இருக்கும்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாண்டியராஜ் மனு கொடுத்துள்ளார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் இந்த மனுவை பாண்டியராஜ் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாண்டியராஜ் கூறுகையில், ‘’விவசாய கூலி வேலை செய்து நான் தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் பணம் கட்ட எனது மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தஞ்சை தாலுகா போலீசார் என்னை சோதித்தனர்.

என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. ஹெல்மெட்டும் வைத்திருந்தேன். ஆனால் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். நீதிமன்றத்துக்கு சென்றால் ரூ.2,500 செலுத்த வேண்டும், எனவே, ரூ.500 இங்கே செலுத்தி விடுங்கள் என்று கூறினர். மோட்டார்சைக்கிளின் சாவியையும் எடுத்துக்கொண்டனர். நான் வேறு வழியின்றி ரூ.500 செலுத்தி எனது வாகனத்தை மீட்டு வந்தேன். ‘’என்றார்.

மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

Police have fined the 2 wheeler youth for not wearing the seat belt!!

அடுத்த செய்தி