ஆப்நகரம்

வாகனங்களை திருடும் நபருக்கு போலீஸார் வலைவீச்சு

தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களைத் திருடிவரும் நபரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வாடகை கார்களை வாடகைக்கு எடுத்து திருட்டில் ஈடுபட்டுள்ளார் இந்த நபர்.

Samayam Tamil 9 Jan 2019, 8:47 am
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சந்திரபிரகாஷ் தனக்குச் சொந்தமான மகேந்திரா KUV 100K 2 (பதிவு எண் TN 69 BD 1242) என்ற நான்கு சக்கர வாகனத்தை கும்பகோணத்தை சேர்ந்த நசுருதின் என்பவரிடம் மாத வாடகைக்கு ஒப்பந்தம் பேசி ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil car theif


இரண்டு மாதங்களாக வாடகை தரவில்லை. மேற்கண்ட நபர் கும்பகோணத்திற்கு வந்த போது நசுருதின் தலைமறைவு ஆகிவிட்டது தெரிய வருகிறது. நசுருதீன் தமிழகம் முழுவதும் இதுபோன்று வாடகை ஒப்பந்தம் செய்து 300-க்கும் மேற்பட்ட வாகனத்தை பெற்று ஏமாற்றியது தெரிய வருகிறது.

இரண்டு வருடத்திற்கு பிறகு தஞ்சை காவல் உயர் அதிகாரி செந்தில்குமார் அவர்களிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கும்பகோணம் டிஎஸ்பி செந்தாமரை கண்ணன் தலைமையில், இன்பெக்டர் மகாதேவன், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மேற்கண்டவாகனம் வேளாங்கண்ணியில் இருப்பதாக போலீசார்ருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை வேளாங்கண்ணிக்கு சென்றபோது வாகனத்தை விட்டு ஓடிவிட்டனர். பின்னர் வாகனத்தை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. காரை விட்டு ஓட்டிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி