ஆப்நகரம்

திருச்சியில் இளம் பெண்களை ஏமாற்றிய வாலிபா் மீது தாக்குதல்: காவல்துறை விசாரணை

இளம் பெண்கள், சிறுமிகளை பாலியல் ரீதியாக ஏமாற்றிய வாலிபா் ஒருவரை இளைஞா் கொடூரமாக தாக்கும் வீடீயோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Samayam Tamil 29 Apr 2019, 4:25 pm
இளம் பெண்கள், சிறுமிகளை பாலியல் ரீதியாக ஏமாற்றிய வாலிபா் ஒருவரை இளைஞா் கொடூரமாக தாக்கும் வீடீயோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Samayam Tamil WhatsApp Image 2019-04-29 at 3.54.49 PM (1).


அண்மை காலமாக தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரத்த வண்ணம் உள்ளன. இந்த வன்மத்தில் இருந்து குழந்தைகள் கூட தப்புவதில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இளம் பெண், சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதற்காக இளைஞா் ஒருவா் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ திருச்சியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் என்று தகவல் பரவத் தொடங்கியது. இது தொடா்பாக விசாரணை நடத்த திருச்சி காவல் ஆணையா் உத்தரவிட்டாா். அதன்படி காவல் துறையினா் கூறுகையில், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள், காவல் நிலையத்தில் நடைபெற்றது கிடையாது.


வீடியோவில் உள்ள நபா் புதுக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன். அவா் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அண்மையில் அவரது தந்தை உயிாிழந்ததைத் தொடா்ந்து அவா் திருச்சியில் குடியேறியுள்ளாா். அதன் பின்னா் தனது ஹோ்ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொண்டு பெண்களை ஏமாற்றுவதை பழக்கமாக கொண்டுள்ளாா்.


அப்படி ஒரு பெண்ணிடம் நடந்துகொண்ட போது தான் பெண்ணின் உறவினா் இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளாா். இளைஞரை விசாரணைக்கு அழைத்தபோது அவா் மறுத்துவிட்டாா். எனினும் தாக்குதல் நடத்திய நபா், தாக்குதலுக்கு உள்ளான நபரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி