ஆப்நகரம்

முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை!

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி இல்லத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 18 Mar 2019, 8:46 am
தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.
Samayam Tamil Palaniswami.


அப்போது, முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே யார் என்ற விவரம் கேட்பதற்குள், அந்த நபர் இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அபிராமபுரம் காவல்நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால், இது பொய்யான தகவல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார், எங்கிருந்து பேசினார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி