ஆப்நகரம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்!

தொலைபேசி மூலம் வந்த தகவலையடுத்து, வெடிகுண்டு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 7 Mar 2019, 6:29 pm
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், வைக்கப்பட்ட வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
Samayam Tamil Bomb Threat


இதையடுத்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு காவல்துறையினர் சேலம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்குள்ள குப்பைத் தொட்டிகளை சல்லடை போட்டு தேடினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும், ஒவ்வொரு இடத்திலும் துருவித்துருவி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால் சர்ச்சைக்குரிய எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி