ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யும் காவல்துறை: திருச்சி சிவா பரபரப்பு தகவல்

ஆர்.கே.நகரில் காவல்துறையினரே பணப்பட்டுவாடா செய்வதாக திருச்சி சிவா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

TNN 6 Apr 2017, 3:28 pm
சென்னை: ஆர்.கே.நகரில் காவல்துறையினரே பணப்பட்டுவாடா செய்வதாக திருச்சி சிவா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil police is giving money to voters in rk nagar says trichy siva
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யும் காவல்துறை: திருச்சி சிவா பரபரப்பு தகவல்


ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பணப்பட்டுவாடா குறித்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி, சிலரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் சசிகலா அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும், அதனை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது புகார் அளித்ததன் பேரில், அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது ஆளும் கட்சியினர் காவல்துறையையே பணப்பட்டுவாடா செய்ய பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்.

Police is giving money to voters in RK Nagar says Trichy Siva.

அடுத்த செய்தி