ஆப்நகரம்

சென்னையில் முக்கிய சாலை மூடப்பட்டது..! காவல்துறை நடவடிக்கை

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரம் முடிவடைந்ததால் சென்னை அண்னா சாலையில் முக்கிய பகுதி மூடப்பட்டது.

Samayam Tamil 23 Apr 2020, 1:54 pm
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை மையப்புள்ளியாக உள்ளது. அதிகபட்சமாக தற்போது 261 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். 103 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil சென்னை அண்ணாசாலை


இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக இயங்கும் சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால் காவல்துறையினர் சாலையை முடக்கி மூடியுள்ளனர்.

12 மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்!

அண்ணா மேம்பாலத்திலிருந்து ஓமந்தூரார் மருத்துவமனை செல்ல தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்றும் பொதுமக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி