ஆப்நகரம்

புழல் சிறை விவகாரம் எதிரொலி; மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று அதிரடி சோதனை!

மதுரை: கைதிகள் மறைத்து வைத்திருக்கும் பொருட்கள் தொடர்பாக போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Samayam Tamil 23 Sep 2018, 8:50 am
சென்னை புழல் சிறையில் கைதிகள் அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
Samayam Tamil Madurai


அதில் டிவிக்கள், எப்.எம் ரேடியோ, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் அனைத்தும் சிறைக்குள் எப்படி வந்தன என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து 5 கைதிகள், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று காலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காவல் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான 150 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும், சிறைக் கைதிகளிடம் இருக்கிறதா என்று சோதனையிட்டு வருகின்றனர். முன்னதாக சேலம், கோவை, கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்பிட்டது.

அப்போது சில தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனை தொடரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police raids today in Madurai Central Jail after Puzhal Jail issue.

அடுத்த செய்தி