ஆப்நகரம்

ஒரே அழுத்து, 5 நிமிடத்தில் வந்து நின்ன போலீஸ் - காப்பாற்றிய “காவலன்” ஆப்!

வீட்டிற்குள் தனியாக மாட்டிக் கொண்ட இளம்பெண்ணை காப்பாற்ற சென்னை போலீஸ் ஐந்தே நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

Samayam Tamil 8 Dec 2019, 1:13 pm
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ள விஷயம் “காவலன்” என்ற மொபைல் ஆப் ஆகும்.
Samayam Tamil Kavalan


இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த ஆப் குறித்த விளம்பர நோட்டீஸ்கள் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வெயிட்டிங்கில் இருந்த “வெங்காய மாலை” - அப்படியே எஸ்கேப் ஆன ப.சிதம்பரம்!

இந்நிலையில் “காவலன்” ஆப் மூலம் தகவல் கொடுத்த ஐந்தே நிமிடங்களில் காவல்துறை உதவிக்கரம் நீட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த சம்பவம் மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் இருந்து ”காவலன்” செயலி மூலம் பெண் ஒருவரிடம் இருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு?- ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை!

இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்தனர். அதாவது ஆர்.கே.நகர், ஆஸ்வல் கார்டன், சிபி சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.

அதேசமயம் உதவி கோரிய பெண்ணின் வீட்டிற்கு 5 நிமிடங்களில் போய் சேர்ந்தனர். அப்போது அங்கு 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.

ஒரு வெங்காயத்தை கூட? இது எவ்வளவு பெரிய அவமானம் - சீமான் சரமாரி கேள்வி!

அந்த நபர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சலீம்(41), தாவூத்(38) என்று தெரியவந்தது.

இவர்கள் கூரியர் நிறுவனத்தில் இருந்து வருவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவரிடம் தவறாக நடந்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி