ஆப்நகரம்

லஞ்சப்புகார்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சொத்துக்கள் பறிமுதல்

பேராசிரியர் நியணத்தில் முறைகேடு செய்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 24 Mar 2018, 10:28 pm
பேராசிரியர் நியணத்தில் முறைகேடு செய்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil vcrajaram


கடந்த 2013-16 ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணிபுரிந்தவர் ராஜாராம். இவர் தன்னுடைய பணிக்காலத்தில், லஞ்சம் பெற்றுக் கொண்டு பேராசியர்களை நியமனம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இன்று (சனிக்கிழமை) இரவு ராஜாராமின் வீடு உள்பட 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும், இவ்வாறு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சென்னை மற்றும் தேனியில் இருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 65 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

அடுத்த செய்தி