ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஓய்வு பெற்ற நீதிபதி பகீர் அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது , 144 தடை உத்தரவு குறித்து அங்கிருந்த மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி பரந்தராமன் 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.

Samayam Tamil 16 Jul 2018, 10:55 am
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது , 144 தடை உத்தரவு குறித்து அங்கிருந்த மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி பரந்தராமன் 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.
Samayam Tamil thoothukudi shoot


ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது கடந்த மே மாதம் 22ம் தேதி காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த விபத்தில் 13 போ் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை மூடப்பட்டது. தனியார் ஆலைக்காக 13 அப்பாவி உயிர்கள் சுடப்பட்ட இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் உள்ள லயோலோ கல்லூரியில் நேற்று, தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், ஒய்வு பெற்ற நீதபதி பரந்தராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மூத்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிடக்கிய 23 உறுப்பினர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தியதாகவும், விசாரணையில் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தியதை பற்றி தெரியாது என்றும் கூறினார்.

அடுத்த செய்தி