ஆப்நகரம்

வேளச்சேரியில் மிஸ்ஸிங்; மும்பையில் அதிரடி மீட்பு - பள்ளி மாணவிக்கு என்ன நடந்தது!

வேளச்சேரியில் மாயமான பள்ளி மாணவி போலீசார் மும்பையில் பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

Samayam Tamil 13 Jun 2019, 12:23 pm
சென்னை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 16 வயது பெண். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் 18 வயதான பிளஸ் 2 மாணவனுக்கு படித்து வந்துள்ளார்.
Samayam Tamil Arrest


இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விசாரணையை தீவிரமாக நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் வேளச்சேரி பள்ளியில் படித்து வந்த மாணவன், சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.

உடனே மும்பை விரைந்த போலீசார், அங்கு தக்க சமயத்தில் இருவரையும் மீட்டனர். இதையடுத்து மாணவனைக் கைது செய்து, மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி