ஆப்நகரம்

பர்கூர் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு 3வது நாளாக போலீஸ் பாதுகாப்பு!

பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ராஜேந்திரனுக்கு, 3வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

TNN 21 Feb 2017, 10:49 am
பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ராஜேந்திரனுக்கு, 3வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil police security continues for bargur admk mla rajendran
பர்கூர் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு 3வது நாளாக போலீஸ் பாதுகாப்பு!


சசிகலா ஆதரவு பெற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ.,க்கள் பலருக்கும், தமிழக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் கொலை மிரட்டல் விடுப்பதும், எம்எல்ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக, வி.ராஜேந்திரன் உள்ளார். இவர், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையின் உறவினர் ஆவார். ராஜேந்திரன் மீது தொகுதி மக்கள் தொடர்ந்து அதிருப்தி கூறிவருகின்றனர்.

இதனால், அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது யாரேனும் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இன்று 3வது நாளாக, போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

Police security continues for Bargur ADMK MLA Rajendran.

அடுத்த செய்தி