சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வர் பதவியேற்பு நிகழ்வுக்காக போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகம் வந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், இருவரும் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அறிக்கையாக அனுப்பினார். பின்னர், இது தொடர்பாக இன்று பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் யார் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் காவல்துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, ஆளுநரிடமிருந்து பதவியேற்பு குறித்த எந்த தகவலும் வராத காரணத்தால் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகம் வந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், இருவரும் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அறிக்கையாக அனுப்பினார். பின்னர், இது தொடர்பாக இன்று பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் யார் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் காவல்துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, ஆளுநரிடமிருந்து பதவியேற்பு குறித்த எந்த தகவலும் வராத காரணத்தால் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.