ஆப்நகரம்

மதுரை: போலீஸ் என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை!!

மதுரையில் ரவுடிகள் மற்றும் போலீஸுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 1 Mar 2018, 6:49 pm
மதுரை: மதுரையில் ரவுடிகள் மற்றும் போலீஸுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Samayam Tamil police shot 2 rowdies in encounter in madurai
மதுரை: போலீஸ் என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை!!


மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் இருந்த ரவுடிகள் சிலரைப் பிடிக்க மதுரை மாவட்ட காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டது. அப்போது, போலீஸுக்கும் ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, இருதரப்பினரும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி