ஆப்நகரம்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: பேராசிரியர்களை விசாரிக்க ராமதாஸ் கோரிக்கை!!

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி தற்கொலையில் பேராசிரியர்களுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Nov 2019, 4:42 pm
கடந்த 10 ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டியில் 14 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறிந்து களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்


இவரைப் போலவே பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை எழுப்பி இருந்தனர்.

சென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி ) அன்று விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, கேரளாவில், கொல்லத்தில் இருக்கும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கும் முடிந்தது.

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்..!

இதையடுத்து அவரது செல்போனில் சில பதிவுகளை பெற்றோர் கவனித்தனர். அதில், தன்னுடைய மரணத்திற்கு சுதர்சன் பத்பநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் காரணம் என ஃபாத்திமா லத்திஃப் பதிவு செய்து இருந்தது தெரிய வந்தது.

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை.! சாட்சிகள் மறைக்கப்படுகிறதா.? சென்னைக்கு விரையும் பெற்றோர்..

அதன் அடிப்படையில் கல்லூரி வளாகத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பேராசிரியர் பத்பநாபனிடம் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவு ( Central Crime Division ) விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு

இதற்காக சிபிஐயில் பணிபுரிந்த கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் விசாரணை குழு செயல்படும் எனவும், மாணவியின் மரணத்திற்கு ஐ.ஐ.டியின் 3 பேராசிரியர்களே காரணம் என ஃபாத்திமா பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி