ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அம்மாவட்ட காவல் துறை அதிகாாிக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2018, 4:33 pm
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அம்மாவட்ட காவல் துறை அதிகாாிக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Sterlite Factory


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் அம்மாவட்ட மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், வருகிற 22ம் தேதி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவியது.

இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை சுற்றியுள்ள 1 கி.மீ. பரப்பளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆலை நிா்வாகம் சா்ாபில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இறுதியில் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அம்மாவட்ட காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 22ம் தேதி போராட்டம் நடைபெறப்போவதாக தகவல்கள் பரவிவரும் நிலையில், 1 கி.மீ. அளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவா் 21ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி