ஆப்நகரம்

பெண் கான்ஸ்டபிள் தற்கொலை விவகாரம் : வைரலாகும் கான்ஸ்டபிள், எஸ்.ஐ.யின் ஆடியோ பதிவு!

பெண் கான்ஸ்டபிள் தற்கொலை விவகாரம் : வைரலாகும் கான்ஸ்டபிள், எஸ்.ஐ.யின் ஆடியோ பதிவு!

TOI Contributor 16 Oct 2016, 5:13 am
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பெண் கான்ஸ்டபிள் ராமு தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு எஸ்.ஐ. அருமை நாயகத்துடன் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil police sub inspector arumainayagam pleacds constable ramu before her death audio released
பெண் கான்ஸ்டபிள் தற்கொலை விவகாரம் : வைரலாகும் கான்ஸ்டபிள், எஸ்.ஐ.யின் ஆடியோ பதிவு!

அம்பாசமுத்திரம் அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த ராமு எனும் பெண் கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான எஸ்.ஐ. அருமை நாயகம் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக மனமுடைந்த ராமு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இதற்கு காரணமான எஸ்.ஐ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராமுவும், அருமை நாயகமும் பேசிய ஆடியோ பதிவு காவல்துறையிடம் உள்ளது. ஆனாலும் அவர் மீது எந்த நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அருமை நாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராமு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக அருமைநாயகத்திடம் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இதில் தன்னை காப்பாற்றுமாறு ராமுவிடம் அருமைநாயகம் கெஞ்சியுள்ளார்.

கான்ஸ்டபிள் ராமு, அருமை நாயகம் மீது கொடுத்த புகாரை அடுத்து விசாரணைக்காக அழைத்திருந்ததற்கு முன்பு காப்பாற்றுமாறு கெஞ்சி இருக்கிறார். உன்னால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்றும், கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று ராமுவிடம் கூறியிருக்கிறார். நீ கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்டும், நான் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்டும் ஒன்று போல் இருந்தால் விட்டுவிடுவார்கள். இல்லை என்றால் என்னை கைது செய்யக்கூட வாய்ப்பிருப்பதாக அருமை நாயகம் ராமுவிடம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி