ஆப்நகரம்

மு.க.ஸ்டாலினை தாக்கிய காவல்துறை பதவி நீக்கம்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மு.க.ஸ்டாலினை தாக்கிய காவல்துறை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

TNN 21 Feb 2017, 10:37 am
சென்னை: பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மு.க.ஸ்டாலினை தாக்கிய காவல்துறை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil police who attacked mk stalin should be dismissed says thirunavukarasar
மு.க.ஸ்டாலினை தாக்கிய காவல்துறை பதவி நீக்கம்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்


தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 18ஆம் தேதி, முதலமைச்சர் பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது அவைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், எதிர்க்கட்சிகள் இல்லாமல் ரகசிய வாக்கெடுப்பு நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் மீது அவைக் காவலர்கள் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள இயலாது என்றும், அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Police, who attacked MK Stalin should be dismissed says Thirunavukarasar.

அடுத்த செய்தி