ஆப்நகரம்

முகிலன் எங்கே? வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சமூகசேவகர் முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி, வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு அமைப்பினர் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

Samayam Tamil 7 Mar 2019, 5:48 pm
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய், 20 நாட்களுக்கும் மேல் கடந்து விட்டது. ஆனால் அவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவரை மீட்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil Mugilan Protest


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் சமூக சேவகர் முகிலன் காணாமல் போய் 20 நாட்களுக்கு மேலாகியும், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடுத்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே அரசு இதில் உடனடியாக தலையிட்டு கண்டுபிடித்து தர கோரி செவ்வேள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மதிமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணி துவங்கி வைத்தார்.

இதில் பாலாறு பாதுகாப்பு இயக்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

அடுத்த செய்தி