ஆப்நகரம்

அரசியல் தீண்டத்தகாதது அல்ல, அதைச் சுத்தப்படுத்த வேண்டும்: கமல் ஹாசன்!

கடலூர்: தமிழகத்தின் அவலநிலையை போக்க வேண்டும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2019, 7:53 pm
கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை எந்த தலைவராலும் காப்பாற்ற முடியாது. மக்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
Samayam Tamil Kamal Haasan.


என்னைப் போலவே மாற்றம் வேண்டும் என்கிற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். எங்கள் கட்சியை வெளியில் இருந்து யாரும் இயக்க முடியாது. நாங்கள் தான் இயக்குகிறோம்.

எப்போதுமே அரசியல் என்பது தீண்டத்தகாதது அல்ல. அதைச் சுத்தப்படுத்த வேண்டும். அரசியல் மாண்புகளை மீட்டெடுக்க வேண்டும். திராவிடம் என்பது நாடு தழுவிய ஒன்று.

அதைப் புரிந்து கொண்டால் தேசிய நீரோட்டத்துடன் இணையலாம். தமிழகத்தில் ஏன் கருப்புக் கொடி காட்டப்பட்டது என பிரதமர் மோடி தான் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தை அவலநிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று கமல் ஹாசன் கூறினார்.

அடுத்த செய்தி