ஆப்நகரம்

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

கோவையில் கல்லூாி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Apr 2019, 3:03 pm
கோவையில் கல்லூாி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Pollachi Murder


கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து பல்வேறு அதிா்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை தனியாா் கல்லூாியில் பயின்று வந்த 20 வயது மாணவி கடந்த 5ம் தேதி காலை கல்லூாி சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடா்ந்து அவரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம் பெண் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினா், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூாி மாணவி தான் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதை காவல் துறையினா் உறுதி செய்தனா்.

கொலை செய்யப்பட்ட மாணவிக்கு அடுத்த மாதம் உறவினருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க ADSP மாடசாமி, பொள்ளாச்சி DSP சிவக்குமார், போத்தனூர் DSP பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி